நடிகை தற்கொலை... காதலனுக்கு தொடர்பா? - பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளிவந்த உண்மை

நடிகை சவுஜன்யா, கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
நடிகை தற்கொலை... காதலனுக்கு தொடர்பா? - பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளிவந்த உண்மை
Published on

குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் சவுஜன்யா என்ற சவி மாரப்பா (வயது 25). நடிகையான இவர், கன்னட சினிமா படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கன்னட சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி இவர் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தனது மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருப்பதாகவும், காதலன் விவேக் மீது சந்தேகம் இருப்பதாகவும் சவுஜன்யாவின் தந்தை குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சவுஜன்யா எழுதி வைத்திருந்த கடிதத்திலும் சொந்த காரணங்களுக்காக தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக கூறி இருந்தார். ஆனால் காதலன் மீது தந்தை குற்றச்சாட்டு கூறி இருந்ததால், சவுஜன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருந்தனர்.

இந்நிலையில், சவுஜன்யா தற்கொலை செய்திருப்பதாகவும், அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகி உள்ளது. இதனை போலீசாரும் உறுதி செய்திருக்கிறார்கள். இதனால் நடிகை சவுஜன்யாவின் மரணத்தில் இருந்த சந்தேகம் தீர்ந்துள்ளது. அதே நேரத்தில் நடிகர் விவேக்குக்கு, சவுஜன்யாவின் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com