லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 177 பேருக்கு கொரோனா

லடாக்கில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,333 ஆக உயர்ந்துள்ளது.
லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 177 பேருக்கு கொரோனா
Published on

லே,

கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. லடாக்கில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் அங்கும் கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று வெளியான அறிக்கையின்படி, லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,333 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். லடாக்கில் தற்போது 1,549 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com