கர்நாடகத்தில் திரவுபதி முர்மு பிரச்சார கூட்டத்தில் பங்கேற்காத 21 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் - விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ்

கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு இருந்தார்.

Update: 2022-07-17 23:29 GMT

பெங்களூரு,

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்காவும் போட்டியிடுகின்றனர். இதையொட்டி பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு பெங்களூருவில் பிரசாரம் செய்தார். அவர் கடந்த 10-ந் தேதி இங்கு எம்.எல்.ஏ.க்களிடம் வாக்கு சேகரித்தார். அவர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு இருந்தார். ஆனால் சுமார் 21 எம்.எல்.ஏ.க்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இந்த நிலையில் அந்த கூட்டத்தை புறக்கணித்த 21 எம்.எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜனதா கட்சி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்