

புதுடெல்லி,
ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டு மனு தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது அவர், ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறாமல் உள்ளது. எனவே, நவம்பர் 30-ந்தேதி நடைபெறும் விசாரணை தேதியை எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என முறையிட்டார்.
அதை ஏற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திட்டமிட்டபடி வருகிற 30-ந்தேதி எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.