ராஜஸ்தானில் கார்- லாரி மோதலில் 5 பேர் பலி

ராஜஸ்தானில் கார் - லாரி மோதியதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
ராஜஸ்தானில் கார்- லாரி மோதலில் 5 பேர் பலி
Published on

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டத் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பிஸ்ராசர் கிராமம் அருகே வந்தபோது அந்த கார், செங்கல் ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் காரில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தனர். இன்னும் ஒருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். லாரி டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com