கர்நாடகத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-11-11 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 8 ஆயிரத்து 27 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 37 பேருக்கும், மைசூருவில் 8 பேருக்கும், உத்தரகன்னடாவில் 4 பேருக்கும், ஹாசனில் 3 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிவமொக்காவில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களில் 58 பேர் குணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.24 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்