7-வது வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நாட்டின் 7-வது வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
7-வது வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
Published on

கொல்கத்தா,

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டு ரெயில் நிலையங்களுக்கிடையில் 550 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை 8 மணி நேரத்திற்கும் மேலான நேரத்தில் கடக்கும் தற்போதைய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை விட இந்த ரயில் வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரெயில் ஒட்டுமொத்தமாக நாட்டின் 7-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகும், மேலும் இது கிழக்கு இந்தியாவில் முதல் முறையாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலாகும்.

அதே போல் கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ரெயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 திட்டப்பணிகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் இன்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com