பள்ளி வேன் மோதி 3 வயது பெண் குழந்தை சாவு

யாதகிரி அருகே பள்ளி வேன் மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

Update: 2022-11-17 18:45 GMT

யாதகிரி:

யாதகிரி மாவட்டம் குருமித்கல் டவுன் லட்சுமிநகர் பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியின் 3 வயது மகள் மனக்‌ஷி. இந்த நிலையில் நேற்று மாலை மனக்‌ஷி வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன், மனக்‌ஷியின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மனக்‌ஷி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

விபத்து பற்றி அறிந்ததும் குருமித்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனக்‌ஷியின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவளது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வேனை டிரைவர் அலட்சியமாக ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்