நாடு முழுவதும் நினைவு சின்னங்கள், சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம், அருங்காட்சியகங்களை பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-08-03 11:00 GMT

புதுடெல்லி,

75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்