காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் படுகொலைகாதலனுடன் சேர்ந்து மகள் வெறிச்செயல்

மத்தியப்பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்தவர் 38 வயது பெண்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் படுகொலைகாதலனுடன் சேர்ந்து மகள் வெறிச்செயல்
Published on

குவாலியர்,

மத்தியப்பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்தவர் 38 வயது பெண். இவர் ஹசிரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடியாபுரா பகுதியில் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த பெண்ணின் வீடு பூட்டிக்கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று கதவை உடைத்து பார்த்தபோது, அந்த பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண்ணின் 17 வயது மகள் 25 வயதுள்ள ஒருவரை காதலித்து வந்ததாகவும் ஆனால் இந்த காதலை அவரது தாய் ஏற்றுக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து தாயை கத்தியால் குத்தி கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சிறுமியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com