காஷ்மீர் பனிமலையில் தவித்த அங்கேரி மலையேற்ற வீரர் விமானப்படையால் மீட்பு

இந்திய விமானப் படை மற்றும் ராணுவத்தின் 30 மணி நேர தேடுதலுக்குப் பின் அகோஸ் வெர்மஸ் மீட்கப்பட்டார்.
காஷ்மீர் பனிமலையில் தவித்த அங்கேரி மலையேற்ற வீரர் விமானப்படையால் மீட்பு
Published on

ஜம்மு,

அங்கேரியின் புடாபெஸ்ட் நகரத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் அகோஸ் வெர்மஸ் (வயது 38). இவர் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சும்சம் பள்ளத்தாக்கில் பனிமூடிய உமாசிலா மலைப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அவர் காணாமல் போய்விட்டார். 5 நாட்கள் கழிந்தநிலையில், இந்திய விமானப் படை மற்றும் ராணுவத்தின் 30 மணி நேர தேடுதலுக்குப் பின் அகோஸ் வெர்மஸ் மீட்கப்பட்டார்.'மலை ஏற்றத்தின்போது வழிதவறிய அவர், 5 நாட்கள் கடுங்குளிரில் அவதிப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது' என்று ராணுவத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com