கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம்

கறம்பக்குடி அருகே கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம்
Published on

கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன் விடுதியில் நேற்று மாலை தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலங்குடி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் (வயது 48) மற்றும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், அவரது அருகே நின்ற ராமகிருஷ்ணன் (28), பழனிவேல் (45) ஆகியோர் மீது மோதியது. இதையடுத்து காயமடைந்த அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com