கைதான விவசாயி மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

கைதான விவசாயி மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-07-06 19:10 GMT

நெல்லை மேலப்பாளையம் அருகே கருங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் நாய்கள் பல மர்மமான முறையில் இறந்துகிடந்தன. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 47) என்ற விவசாயி 9 நாய்களுக்கு விஷம் வைத்து சாகடித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அந்த விவசாயி மீது மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்