சென்னை, ஆலந்தூர் அருகே மாநகர பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு

சென்னை, ஆலந்தூர் அருகே மாநகர பஸ் ஒன்று தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2023-07-05 21:53 GMT

சென்னை,

சென்னை, ஆலந்தூர் அருகே மாநகர பஸ் ஒன்று தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக சென்னையில் சிறுச்சேரி - கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் ஒன்று ஆலந்தூர் அருகே காந்தி மார்கெட் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்