ரூ.43 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.43 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.;
பரமத்திவேலூர்
பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 849 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.16.30-க்கும், சராசரியாக ரூ.22.65-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.44 ஆயிரத்து 954-க்கு ஏலம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 835 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ.15.30-க்கும், சராசரியாக ரூ.22.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.43 ஆயிரத்து 435-க்கு ஏலம் நடைபெற்றது.