ரூ.43 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.43 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.;

Update:2023-10-18 00:26 IST

பரமத்திவேலூர்

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 849 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.16.30-க்கும், சராசரியாக ரூ.22.65-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.44 ஆயிரத்து 954-க்கு ஏலம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 835 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ.15.30-க்கும், சராசரியாக ரூ.22.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.43 ஆயிரத்து 435-க்கு ஏலம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்