பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 846 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.21.75-க்கும், குறைந்தபட்சமாக ரூ15.05-க்கும், சராசரியாக ரூ.19.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.76 ஆயிரத்து 301-க்கு வர்த்தகம் நடைபெற்றது.