மார்த்தாண்டத்தில்கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-21 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

மார்த்தாண்டம் வடக்கு தெரு மேலக்குளத்தை சேர்ந்தவர் பாபு (வயது 50). இவருடைய மனைவி சுசீலா (45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அவர்களில் மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. 2-வது மகள் அபிஷா (19) குழித்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி இரவு அபிஷா வீட்டில் தூங்க சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் காலையில் வெகுநேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. உடனே குடும்பத்தினர் சென்று பார்த்த போது அவர் விஷம் குடித்த நிலையில் மயக்க நிலையில் இருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அபிஷாவை மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வயிற்றுவலியால் அபிஷா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

மேலும் இதுகுறித்து அபிஷாவின் தாய் சுசீலா மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்