விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆதலால் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.