தடுப்புகம்பி மீது ஜீப் மோதி 3 பேர் காயம்

அய்யலூர் அருகே தடுப்புகம்பி மீது ஜீப் மோதி 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-07-06 19:30 GMT

கும்பகோணம் அருகே உள்ள பந்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 52). இவர், தனது நண்பர்களான மதிவாணன், பாலமுருகன் ஆகியோருடன் ஒரு காரில் கும்பகோணத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றார். ஜீப்பை மதிவாணன் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் மூக்கரபிள்ளையார் கோவில் அருகே ஜீப் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையின் நடுவே இருந்த தடுப்பு கம்பி மீது பயங்கரமாக மோதியது. இதில் வடிவேல், மதிவாணன், பாலமுருகன் ஆகிய 3 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்