அம்மன் கோவிலில் பிரதோசம்

ஓரியூர் மட்டுவார் குழலி அம்மன் கோவிலில் பிரதோசம் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-12-05 17:17 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா ஓரியூர் மட்டுவார் குழலி அம்மன் சமேத செயுமானார் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து சாமி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஓரியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்தகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்