சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ரிஷிவந்தியம் அருகே சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா.
சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
Published on

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியம் மரூர், மேட்டூர் கிராமத்திலிருந்து வாணாபுரம் புதூர் கிராமத்தை இணைக்கும் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிபாக்கின்றனா. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com