தூத்துக்குடி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

தூத்துக்குடி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-05 18:45 GMT

ஸ்பிக் நகர்:

முள்ளக்காடு கோவிலம்மாள் நகரைச் சேர்ந்த ஜோதிராஜ் மகன் கோவில் ராஜ் (வயது 52). இவர் எம்.சவேரியார்புரம் பஸ் நிறுத்தம் அருகில் அரசு தடை செய்துள்ள லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்தாராம். அவரை முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் பிடித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்