அறந்தாங்கி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

அறந்தாங்கி பகுதியில் இன்று மின்நிறுத்தப்படுகிறது.

Update: 2022-07-13 19:18 GMT

அழியாநிலை, நாகுடி, அறந்தாங்கி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அறந்தாங்கி நகர் பகுதிகள் மற்றும் அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி குரும்பூர், மறமடக்கி, ரெத்தினகோட்டை, ஆளப்பிரந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல், நாகுடி, அத்தானி, தொண்டைமாநேந்தல், மேல்மங்களம், பெருங்காடு, மேலப்பட்டு, திணையாகுடி, கட்டுமாவடி, வல்லவாரி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்