

திருக்கடையூர்:
திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், பிரதோஷ நாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.