சிவகிரி அருகே ரூ.7.60 லட்சத்தில் திட்டப்பணிகள்

சிவகிரி அருகே ரூ.7.60 லட்சத்தில் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.
சிவகிரி அருகே ரூ.7.60 லட்சத்தில் திட்டப்பணிகள்
Published on

சிவகிரி:

சிவகிரி அருகே தென்மலை பஞ்சாயத்து, செந்தட்டியாபுரம் புதூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்டு ரோடு மற்றும் பொது மயானத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com