ஊரகவளர்ச்சி துறை அலுவலர்கள் போராட்டம்
ஊரகவளர்ச்சி துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தினர்.;
தொண்டி,
திருவாடானை யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை முடக்கும் வகையில் அனைத்து நிலை ஊழியர்களையும் ஒரே நேரத்தில் பணிமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்தும், அந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக ஒட்டுமொத்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று யூனியன் அலுவலகம் அலுவலர்கள், பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.