துணைதாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணி நீக்கம்

துணைதாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-05-19 17:17 GMT

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த தே. புதுக ்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சுமார் 69 ஏக்கரை தனி நபர் 5 பேர்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் பட்டா போட்டுக் கொடுத்தார்களாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவின்பேரில் சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் விசாரணை நடத்தினார்.‌ அப்போது 5 பேருக்கு 69 ஏக்கர் இடத்தை தவறாக பட்டா கொடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மானாமதுரை மண்டல துணை வட்டாட்சியர் சேகர் மற்றும் தே. புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்