கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு

விழுப்புரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு
Published on

விழுப்புரம் அருகே உள்ள சத்திப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 63), விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருடைய நிலத்தை கடந்த 5 வருடமாக குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர், நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் அவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com