பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியவருக்கு வலைவீச்சு

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியவரை வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-09-22 20:15 GMT


மதுரை எஸ்.எஸ்.காலனி சந்திரகாந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அதில் அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டவுடன் போலீசார் திடீரென்று அந்த வீட்டிற்குள் புகுந்தனர். அப்போது அங்கிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் தங்களை பெருங்குடி சோளங்குரணி பகுதியை சேர்ந்த சகாபுதீன் (வயது 33) என்பவர் வீட்டு வேலைக்கு என்று அழைத்து வந்தார். இங்கு எங்களை அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி அதனை ரகசியமாக படம் எடுத்தார். மேலும் நாங்கள் அதற்கு உடன்படவில்லை என்றால் ஆபாச படத்தை உறவினர்களிடம் காட்டி விடுவதாக மிரட்டி தொடர்ந்து அதனை செய்யுமாறு வற்புறுத்தி வந்தார். போலீசாரை கண்டவுடன் இங்கிருந்து தப்பி விட்டதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய சகாபுதீனை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்