நடைபாதையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்

ராஜபாளையம் அருகே நடைபாதையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2023-06-22 19:30 GMT

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் இருந்து புனல்வேலி செல்லும் சாலையில் இருபுறமும் சாலையை அகலப்படுத்தி நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது இதற்கு முன்பு சாலை குண்டும் குழியுமாக இருந்தன. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல இந்த சாலை விரிவாக்கப்பட்டது. சில கட்சியினர் நடைபாதையை மாற்றி அமைக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே நடைபாதையை அகற்றக் கூடாது என புனல் வேலி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்