நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு; பீகாரில் சில பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2022-10-19 17:38 IST

காத்மண்டு,

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே 53 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 2.52 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பீகார் மற்றும் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து உடனடி தகவல் இல்லை. முன்னதாக, லடாக் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்