அதிதிராவை தொடர்ந்து அந்த பிரச்சினையை சந்தித்த மற்றொரு நடிகை

சமீபத்தில் தனது பெயரை பயன்படுத்தி வாட்ஸ்-அப்பில் மோசடி நடப்பதாக அதிதிராவ் தெரிவித்திருந்தார்.;

Update:2025-11-19 14:56 IST

சென்னை,

மூன்று நாட்களுக்கு முன்பு, நடிகை அதிதி ராவ், யாரோ ஒருவர் ‘வாட்ஸ்-அப்' மூலமாக போட்டோகிராபர்களை தொடர்புகொண்டு, தான் பேசுவது போல ‘போட்டோஷூட்' குறித்து பேசி வருவதாக தெரிவித்தார். அது தான் இல்லை எனவும் இவ்வாறு தொடர்புகொள்ள மாட்டேன் எனவும் தெளிவுபடுத்தினார்.

இப்போது, ​​நடிகை ஸ்ரேயா சரண் அதே பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார். வாட்ஸ்அப்பில் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தி யாரோ ஒருவர் மக்களைத் தொடர்பு கொண்டு வருகிறார் எனவும் தான் இதில் ஈடுபடவில்லை என்பதையும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்