4 ஆண்டுகளை நிறைவு செய்த “மாநாடு”... வெங்கட் பிரபுவின் நெகிழ்ச்சி பதிவு

‘மாநாடு’ படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.;

Update:2025-11-25 18:09 IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார்.

இந்நிலையில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ ‘மாநாடு’ எனும் வேடிக்கையான வித்தியாசமான டைம் லூப் பற்றிய படத்தை எடுக்கையில் ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். அவர்களுக்கு இது புரிந்துவிடும் என உறுதியாக நினைத்தேன். நாங்கள் நினைத்ததை விட படத்தை புரிந்து கொண்டாடி மகிழ்ந்தீர்கள். சோதனைமுறையில் எடுக்கப்படும் வித்தியாசமான முயற்சிகளை கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்தான் எங்களை எல்லைகளை கடந்து சிந்திக்க தூண்டுகிறீர்கள். உங்களின் நம்பிக்கைக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்