“நேரம் வரும்போது பேசுவேன்” - திருமணம் குறித்து ராஷ்மிகா பதில்

ராஷ்மிகாவின் திருமணம் குறித்து வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன.;

Update:2025-12-05 14:11 IST

சென்னை,

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவைச் சுற்றி, குறிப்பாக அவர்களது திருமணம் குறித்து வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா இல்லத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இருப்பினும் இருவரும் அதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

தொடர்ந்து பிப்ரவரி மாதம் உதய்பூரில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஒரு நேர்காணலின்போது, ​​ராஷ்மிகாவிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் அந்த தகவலை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை, மாறாக அனைவரையும் காத்திருக்கும்படி கூறினார். "அதைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும் போது, ​​நாங்கள் பேசுவோம்’ என்று அவர் புன்னகையுடன் பதிலளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்