நொய்யல்: பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

கார்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.;

Update:2025-12-15 17:44 IST

சிறப்பு அலங்காரத்தில் கோம்புப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள்.

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துளசி இலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் கோம்புபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

குட்டக்கடை -புன்னம் செல்லும் சாலையில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத ஏகாதசியை முன்னிட்டு அனுமந்தராய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்