சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.;
மும்பை,
வாரத்தின் முதல் நாளான இன்று (01.12.2025 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 27 புள்ளிகள் சரிந்த நிப்டி 26 ஆயிரத்து 175 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 71 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 681 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 75 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 814 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 64 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 641 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
2 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 46 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 78 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 867 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.