ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;

Update:2025-12-22 15:04 IST

மும்பை,

வாரத்தின் முதல் நாளான இன்று (22.12.2025 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 209 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26 ஆயிரத்து 174 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 245 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 318 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

102 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 481 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 648 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 579 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

120 புள்ளிகள் ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 981 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 133 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 274 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்