கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்;
மும்பை,
வாரத்தின் இறுதிநாளான இன்று (23.01.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 241 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 48 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 727 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 473 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 328 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 821 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 769 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 537 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
258 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 66 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 962 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 863 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.