ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (10.11.2025 - திங்கட்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 82 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 574 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 60 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 937 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 66 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 305 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 319 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 535 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
80 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 527 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 17 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 995 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.