சென்னையில் உள்ள கோவிலில் வேலை வாய்ப்பு: ரூ.48 ஆயிரம் சம்பளம்- உடனே விண்ணப்பிங்க

சென்னையில் உள்ள கோவிலில் வேலை வாய்ப்பு: ரூ.48 ஆயிரம் சம்பளம்- உடனே விண்ணப்பிங்க

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Published on

சென்னை,

சென்னை பூங்கா நகரில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 08 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்; அலுவலக உதவியாளர், இரவு காவலர், தோட்ட பராமரிப்பாளர், ஓதுவார், சுயம்பாகி, கால்நடை பராமரிப்பாளர், ஸ்ரீபாதம் தாங்கி, சரக்கரை காப்பாளர்- என மொத்தம் 08 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.07.2025 தேதியின் படி 18-வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு: அதிகபட்சமாக ரூ.13,200- 41,800 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதியுள்ளவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர்,சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், எண் 315, தங்கசாலை தெரு, சென்னை -600003.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php

X

Daily Thanthi
www.dailythanthi.com