ஆதார் மையத்தில் சூப்பர்வைசர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மொத்தம் 282 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.;
ஆதார் பதிவுக்காக நாடு முழுவதும் ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன. மாவட்ட தலைநகரங்களில் ஆதார் மையத்தின் நேரடி அலுவலகங்கள் உள்ளன. CSC e Governance - india limited என்ற அரசுசார் நிறுவனம் இதை இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:
பணியிடங்கள்: சூப்பர்வைசர்/ஆபரேட்டர் பிரிவில் காலியிடங்கள் உள்ளன.
தமிழ்நாடு -03, மராட்டியம்- 20, தெலுங்கானா -11, கர்நாடகா -10 என மொத்தம் 282 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக மத்திய அரசின் ஆதார் ஆபரேட்டருக்கான சான்றிதழ் அவசியம்.
வயது வரம்பு: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு - நேர்முக்தேர்வு
சம்பளம்: மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்வு முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cscspv.in/