61 காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு
அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் விவரங்கள் வருமாறு:
தேர்வு நடத்தும் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)
பணி நிறுவனம்: தமிழ்நாடு மின் விநியோக நிறுவனம் லிமிடெட்
காலி இடம்: 61
பதவி: அரசு உதவி வழக்கு நடத்துநர் (நிலை - 2)
கல்வி தகுதி: பி.எல். பட்டம் பெற்றிருக்க வேண்டும். வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். குற்றவியல் நீதிமன்றங்களில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
வயது: பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.
தேர்வு முறை: தமிழ் தகுதித் தேர்வு, முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-12-2025.
இணையதள முகவரி: https://tnpsc.gov.in/