ராஜஸ்தானில் கால்நடை கண்காட்சிக்கு வந்த ரூ.21 கோடி எருமை மாடு திடீர் உயிரிழப்பு

கண்காட்சியில் வைரலான ரூ.21 கோடி மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-11-03 21:34 IST

புஷ்கர்,

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் ‘புஷ்கர் கண்காட்சி’ நடைபெறுகிறது. இதில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.

இந்த கண்காட்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ‘அன்மோல்’ என்ற எருமை மாடு ஈர்த்தது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின் விலை ரூ.21 கோடியாகும்.

இதுகுறித்து அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் கூறுகையில், ‘‘மன்னரை போல பராமரிக்கப்படும் இந்த எருமைக்கு நாள்தோறும் பால், நெய், பருப்பு வகைகளோடு உலர் பழங்கள் உணவாக தருகிறேன். இதற்கு ஒரு நாளைக்கு ரூ.1,500 செலவாகிறது'’ என்று பெருமையாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த கண்காட்சியில் வைரலான ரூ.21 கோடி மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எருமை மாடு இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. எனினும் அது வனப்புடன் இருக்க ஹார்மோன் ஊசி போட்டு இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்