பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வாகனம் மோதி போலீஸ்காரர் பலி

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வாகனம் மோதி போலீஸ்காரர் பலி
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் அகில்யாநகர் மாவட்டம் கார்ஜத் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சுதம் ராஜ்குமார் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ராஜ்குமார் நேற்று இரவு ரோஷின் பகுதியில் உள்ள சாலையில் சக போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் வேகமாக வந்த வாகனம் ராஜ்குமார் மீது மோதிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து வேகமாக சென்றுள்ளது. வாகனம் மோதியதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜ்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com