உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-11-30 15:52 IST

புதுடெல்லி,

உத்தரகாண்டின் சாமோலி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 10.27 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.19 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.48 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்