குஜராத்: மரத்தின் மீது கார் மோதி கோர விபத்து - 3 பேர் பலி

கார் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்;

Update:2025-12-17 12:48 IST

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பகுசாரா பகுதியில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர்.

பகுசாரா பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய ஒருவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்