நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் நல்லகண்ணு என சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-26 14:16 IST

புதுடெல்லி,

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

விடுதலைப் போராட்ட வீரராகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அயராது போராடிய போராளியாகவும் திகழ்ந்து, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவராக விளங்கும் நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் போது, “எல்லா வெற்றியும் மகிழ்ச்சிக்கு உரியதல்ல ” என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்திய மகத்தான தலைவர்.

நேர்மையைப் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு, எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடன் நிறைவாழ்வு வாழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்