‘கூட்டணிக்காக யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’ - டி.டி.வி.தினகரன்

கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-29 13:43 IST

திருச்சி,

திருச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“கூட்டணிக்காக யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்து ஒரு தலைவரை வேண்டுமானால் வழிக்கு கொண்டு வர முடியும், ஆனால் தொண்டர்கள் கேட்பார்களா?

நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபோதும், அந்த கூட்டணியை விட்டு வெளியே வந்த பிறகும் சில கட்சிகள் எங்களை அணுகி, அவர்களது கூட்டணிக்கு வர வேண்டும் என்று பேசி வருவது உண்மைதான்.

கூட்டணி குறித்து இதுவரை நாங்கள் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. கூட்டணி பற்றிய முடிவு எடுக்கப்பட்ட பிறகு அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்