நாடாளுமன்றத்தில் சிகரெட் புகைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. - வைரல் வீடியோ

அனுராக்சிங் தாக்கூர் குற்றம்சாட்டியது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கீர்த்தி ஆசாத் என்று தெரியவந்தது.;

Update:2025-12-18 09:49 IST

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவர் சிகரெட் புகைப்பதாக பா.ஜனதா எம்.பி அனுராக்சிங் தாகூர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் அனுராக்சிங் தாக்கூர் குற்றம்சாட்டியது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கீர்த்தி ஆசாத் என்றும், அவர் உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த சிகரெட் மூலம் நாடாளுமன்ற அவைக்குள் அமர்ந்து சிகரெட் பிடித்ததாகவும் கூறி அதுதொடர்பான வீடியோ பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பா.ஜனதா எம்.பி. அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், புகை பிடிப்பது சட்டவிரோதமானது அல்ல என்றாலும் நாடாளுமன்றத்திற்குள் சிகரெட் பிடிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் முறைகேடான நடத்தை குறித்து அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த பதிவில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்