தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

புதுவையில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-01-01 21:43 IST

மூலக்குளம்

புதுவை முத்திரையர்பாளையம் பஜனை மடம் வீதியை சேர்ந்தவர் மண்நாதன் (வயது 78). இவர் நோய் கொடுமையால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்